அனைவருக்கும் எனது அன்பு கலந்த பணிவான வணக்கங்கள்.
இது - வலைப் பூக்கள் உலகிற்குள் என்னுடைய முதல் அடி.
நான் -
திண்டுக்கல் அருகில் உள்ள "பட்டி வீரன் பட்டி" எனும் குக்கிராமத்திலிருந்து வந்து, பணியின் காரணமாக சென்னையில் வாழும் சிலருள் ஒருவன்.
பலவேறு காரணங்களால்; பாடப் பத்தகம் & அலுவல் காரணமான தேவை தவிர வேறு எந்த படிப்பறிவையும் வளர்த்துக் கொள்ளாத பலருள் ஒருவன்,
வாழ்வை இரசிக்கிற,
மகிழ்ச்சியாய் இருக்க விரும்புகிற,
குடும்பம், உறவுகள் மற்றும் நண்பர்களோடு இருப்பதை அதிகமாய் விரும்புகிற,
சுற்றியிருப்போரை மகிழ்விப்பதை இன்னும் அதிகமாய் விரும்புகிற,
பிடித்த மற்றும்/அல்லது பழக்கமில்லாத விசயங்களை மட்டும் ஒத்துக் கொண்டு; அவற்றை முழுமையாய்ச் செய்கிற,
மேலும் சில ரசிக்கத்தக்க விசயங்களைத் தேடியபடியே பயணிக்கும் (இன்னும்) ஒரு பயணி.
முக நூலில் எனது சில பதிவுகளைப் பார்த்து நண்பர்கள் கொடுத்த பெரும் ஊக்கத்தினாலும்,
எனது நண்பர்கள் சிலர் தொடர்ந்து எழுதி வரும் வலைப் பூக்களைப் பார்த்து ஏற்பட்ட சிறு ஆர்வத்தினாலும்,
இந்த உலகினுள், கீழ்க்கண்ட எண்ணங்களோடு, அடியெடுத்து வைக்கிறேன்.
1) "யாரேனும் ஒரே ஒருவருக்காவது பயன்படும்" என்று நான் உணர்கிற எனது அனுபவங்களையும், அறிகின்ற விசயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்
2) நான் ஆர்வமாயிருக்கிற அல்லது/மேலும் எனக்குதேவைப்படுகிற விசயங்களில், மற்றவர்களின் கண்ணோட்டத்தை கேட்டுப் பெற வேண்டும்
3) எனது கவிதை எழுதும் ஆர்வத்தினால் விளைகின்ற எழுத்துக்களை பகிர்ந்து, அதற்கு மற்றவர்களின் கண்ணோட்டத்தை கேட்டுப் பெற வேண்டும்.
தங்களது ஆதரவை விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் வாயிலாக என்றென்றும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி, வணக்கம்!
தமிழ் வாழ்க!
ReplyDeleteநன்றி, தமிழா!
Deleteவரவேற்பும்..வாழ்த்துக்களும்... Blog உலகிற்க்கு லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வந்து இருக்கிறீர்....முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்..
ReplyDeleteநன்றி, நண்பா! முடிந்த அளவை விட சிறிது அதிகம் முயற்சி செய்கிறேன் :)
Delete